Breaking

Friday, August 20, 2021

ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் 23 முதல் 27 வரை, கணினி பயிற்சி அளிக்கப் படும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, பள்ளி கல்வித்துறையின், ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு பள்ளிகளில் பணியாற்றும், 12 ஆயிரத்து, 500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அடிப்படை கணினி பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, 77 ஆயிரம் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த பயிற்சி, 23ல் துவங்கி, 27ல் முடிகிறது. 'ஆன்லைன்' வழியாக, இந்த பயிற்சி வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog