இந்தியாவில் கொரோனா 3ம் அலை 185 நிபுணர் குழு எச்சரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 05, 2021

Comments:0

இந்தியாவில் கொரோனா 3ம் அலை 185 நிபுணர் குழு எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா 3ம் அலை 185 நிபுணர் குழு எச்சரிக்கை
நாடு முழுவதும் கொரோனா தொற்று 2ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்கள் திண்டாடி வருகின்றன. இந்நிலையில் கொரோனா 3ம் அலை தொடரும் எனவும் அது குறித்து ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் 185 வல்லுநர்கள் கடிதம் எழுதியுள்ளனர். 2019ம் ஆண்டு துவங்கிய கொரோனா தொற்று பரவல் தற்போது முதல் அலை இரண்டாம் அலை என தொடர்ந்து வருகிறது. இதைத் தடுக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இருப்பினும் நோய்தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதமும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தற்போது கொரோனா 3ம் அலை பரவ வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் தெரி வித்துள்ளனர். எனவே அதை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் எடுக்க எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 185க்கும் மேற்பட்ட நிபுணர்கள் எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews