Breaking

Sunday, May 30, 2021

ஆசிரியர்களுக்கு கொரோனா சிகிச்சை மையங்களில் பணி ஒதுக்கீடு

ஆசிரியர்களுக்கு கொரோனா சிகிச்சை மையங்களில் பணி ஒதுக்கீடு
ஈரோடு, மே.30:
கொரானா வைரஸ் நோய் இரண்டாம் அலை தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரானா தடுப்பு மருத்துவ மையங்களில் தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், முக கவசம், கிருமிநாசினி தெளிப்பதை உறுதி செய்தல், ஆக்சிஜன் சிலிண்டர்கள், அவசர தடுப்பு மருத்துவ தேவைகள் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளில் துணை வட்டாட்சியர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் விமானம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை, 2 மணி முதல் இரவு 10 மணி வரை, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை என மூன்று சுற்றுகளாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு ஆட்சியர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார் .

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog