JEE மார்ச் மாத தேர்வுகள் நாளை முதல் தொடக்கம் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 15, 2021

Comments:0

JEE மார்ச் மாத தேர்வுகள் நாளை முதல் தொடக்கம் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தேசிய தேர்வு ஆணையம் மார்ச் மாதத்துக்கான ஜேஇஇ தேர்வுகளை நாளை முதல் நடத்த இருக்கிறது. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, தேர்வு முறை போன்ற முக்கிய வழிகாட்டுதல்கள் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி – கல்லூரி 3 நாட்களுக்கு விடுமுறை!!
ஜேஇஇ தேர்வுகள்:
தேசிய தேர்வு முகமை 2021ம் ஆண்டுக்கான ஜேஇஇ நுழைவு தேர்வை நடப்பு ஆண்டு முதல் நான்கு கட்டங்களாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடத்த உள்ளது. நடப்பு ஆண்டுக்கான முதல் கட்ட பிப்ரவரி மாத தேர்வுகள் கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. முதல் ஷிப்ட் தேர்வு காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். இரண்டாவது ஷிப்ட் மதியம் 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாத தேர்வுகள்:
இரண்டாம் கட்ட மார்ச் மாத தேர்வுகள் நாளை (16.3.2021) முதல் மார்ச் 18ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 10ம் தேதி முதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. தேர்வுகள் எழுத்து முறையில் நடக்க உள்ளது. நடப்பு ஆண்டு தேர்வுகளில் எதிர்மதிப்பெண்கள் முறை இல்லை. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு jeemain.nta.nic.in என்ற அதிகார்பூர்வ இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டின் நிலை? – பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து 1 வருடம் நிறைவு!
தேர்வு வழிகாட்டி:
மாணவர்கள் தேர்வுக்கு பயன்படுத்தும் கணக்கீடு உதவி தாளை தேர்வு மையத்தில் இருக்கும் அட்டை பெட்டியில் போட வேண்டும். தேர்வு மையத்திற்குள் மின்னணு சாதனங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், ஆபரண நகைகள் கொண்டு வரவும், அணியவும் அனுமதி இல்லை. மத காரணங்களுக்காக அணியப்படும் உடைகளுக்காக முன்னரே தேர்வு மையத்தில் அனுமதி வாங்க வேண்டும் போன்ற வழிகாட்டுதல்களை மாணவர்கள் தேர்வு நாளில் கடைபிடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews