தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டின் நிலை? – பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து 1 வருடம் நிறைவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 15, 2021

Comments:0

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டின் நிலை? – பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து 1 வருடம் நிறைவு!

தமிழகத்தில் நேற்றுடன் கொரோனா நோய் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டு 1 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது மாணவர்களுக்கு எந்த அளவிற்கு கற்றல்திறனை மேம்படுத்தி உள்ளது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
கொரோனா நோய் தொற்று: நாடு முழுவதும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்கம் அச்சுறுத்தி வந்தது. கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளிகள் மார்ச் மாதம் 14 ஆம் தேதி முதல் மூடப்பட்டன. அந்த நேரத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டதால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதே போல 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளிகள் திறக்க முடியாத சூழ்நிலை காரணமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வந்த காரணத்தினால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு கையெழுத்து போட்ட ஆசிரியர் - ஆய்வில் கண்டுபிடித்த தேர்தல் அலுவலர்.
ஆன்லைன் பாடங்கள் மாணவர்களுக்கு கல்வியை எந்த அளவிற்கு கொண்டு சேர்கின்றது என்பது கேள்வி குறியாகவே உள்ளது. 2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் கொரோனா தாக்கம் இல்லாமல் தொடங்கலாம் என இருந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அவை கனவாக மட்டுமே உள்ளன. கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஓராண்டுகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு கையெழுத்து போட்ட ஆசிரியர் - ஆய்வில் கண்டுபிடித்த தேர்தல் அலுவலர்.
மாணவர்களும் பள்ளிகள் திறக்க வேண்டும் தங்களது நண்பர்களை சந்தித்து பேச வேண்டும் என ஆவலுடன் உள்ளனர். சில பள்ளிகள் மழலை வகுப்புகள் நடத்துவது சந்தேகம் தான் என தெரிவித்துள்ளது. இனி வரும் ஆண்டுகளில் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews