Breaking

Sunday, March 21, 2021

விடுதிகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 'தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 10 ஆண்டு களுக்கு மேலான, 80 ஆதிதிராவிடர் நல விடுதிகள் மற்றும் 20 பழங்குடியினர் விடுதிகள், 20 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்' என, முதல்வர் அறிவித்திருந்தார். இதன்படி, மேம்படுத்தும் பணிகளுக்காக, 80 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு, 14.73 கோடி ரூபாய்; 20 பழங்குடியினர் நல விடுதிகளுக்கு, 3.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்கான அரசாணை, பிப்., 26ல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog