TNPSC - 102 பேருக்கு அரசு பணி நியமன ஆணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 06, 2021

Comments:0

TNPSC - 102 பேருக்கு அரசு பணி நியமன ஆணை

அரசு பணிக்கு தேர்வான, 102 பேருக்கு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், சமூக நலத்துறைக்கு, சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு, எட்டு பேர்; தட்டச்சர் பணியிடங்களுக்கு, 37 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
சமூக நலத்துறையில் பணியாற்றி, பணியின் போது இறந்த ஊழியர்கள், 26 பேரின் வாரிசு தாரர்களுக்கு, கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும், பணி நியமன ஆணை வழங்குவதன் அடையாளமாக, நேற்று முன்தினம், தலைமை செயலகத்தில், நான்கு பேருக்கு, பணி நியமன ஆணையை, முதல்வர் வழங்கினார். ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், தட்டச்சர் பணிக்கு, 31 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதன் அடையாளமாக, நான்கு பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews