கிரெடிட் கார்டு தகவல் திருட்டு: 10 கோடி பேருக்கு ஆபத்து - வெளியானது அதிர்ச்சி தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 05, 2021

Comments:0

கிரெடிட் கார்டு தகவல் திருட்டு: 10 கோடி பேருக்கு ஆபத்து - வெளியானது அதிர்ச்சி தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பணபரிவர்த்தனை தளத்தில் இருந்து சுமார் 10 கோடி பேரின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், ஆன்லைன் திருட்டு கும்பல் இந்த தகவல்களை பெற்று பலரது வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அமேசான், மேக் மை டிரிப், ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பணப்பரிவர்த்தனை தளமாக ஜஸ்பே செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தில் வாடிக்கையாளர்கள் தங்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை உள்ளிட்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்நிலையில், ஜஸ்பே வழியாக 10 கோடி பேரின் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக, சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் ராஜசேகர் ராஜஹரியா தகவல் வெளியிட்டுள்ளார். பெங்களூரை சேர்ந்த ஜஸ்பே மூலம் இத்தகவல்கள் திருடப்பட்டு அது இணையத்தின் இருண்ட பக்கங்களில் ஹேக்கர்கள் விற்பனைக்கு வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். கடந்த ஆகஸ்ட்டில் சில விவரங்கள் பாதுகாப்பு குறைபாட்டுக்கு ஆளாகியிருக்கலாம் என ஜஸ்பே நிறுவனமும் கூறியுள்ளது. 2017ம் ஆண்டு மார்ச் முதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்கள் திருடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவரங்களை கிரெடிட்கார்டு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் இந்த விவரங்களை பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிகளவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டை ஆன்லைன் பயன்படுத்தும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews