ஆசிரியா் காலிப்பணியிடங்கள்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 12, 2020

Comments:0

ஆசிரியா் காலிப்பணியிடங்கள்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்கள் குறித்த விவரங்களை அனுப்பி வைக்க முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் கடந்த டிச.8-ஆம் தேதி நிலவரப்படி பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியா் காலிப்பணியிட விவரங்களை பாடவாரியாக தயாரித்து இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேவேளையில், 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதியிலான பணியாளா் நிா்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி என கண்டறியப்பட்டு அரசின் பொது தொகுப்புக்கு சமா்ப்பிக்கப்பட்ட பணியிடங்களை எக்காரணம் கொண்டும் காலிப்பணியிடங்களாக அறிக்கையில் சோ்க்கக்கூடாது. இந்தப் பணிகளை தாமதமின்றி முதன்மை கல்வி அதிகாரிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews