தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க பெற்றோர் எதிர்ப்பு: 12,700 பள்ளிகளில் நடந்த கூட்டத்தில் கருத்துகளை பதிவு செய்தனர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 10, 2020

Comments:0

தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க பெற்றோர் எதிர்ப்பு: 12,700 பள்ளிகளில் நடந்த கூட்டத்தில் கருத்துகளை பதிவு செய்தனர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் வருகிற 16ம் தேதி பள்ளிகள் திறப்பது தொடர்பாக பெற்றோரிடம் நடத்தப்பட்ட கருத்து கேட்பில் பல மாணவர்களின் பெற்றோர் பங்கேற்கவில்லை. பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அரசுக்கு சாதகமான தீர்மானங்களை அனுப்பி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள், தனியார் சுயநிதிப் பள்ளிகள் என 12 ஆயிரத்து 700 பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் சுமார் 50 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் அரசு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், மார்ச் மாதம் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதால், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வை அரசு ரத்து செய்தது. மேலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத காரணத்தால் நவம்பர் மாதம் வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளதால் அவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவித்தது. இதற்காக பள்ளிகளை திறக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கலாம் என்று அரசு அறிவித்தது. இதற்கு பெற்றோர் தரப்பில் இருந்து கடும் கண்டனமும், எதிர்ப்பும் எழுந்தது. இதனால் பள்ளிகளை திறப்பதா வேண்டாமா என்ற குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெற்றோரிடம் கருத்து கேட்டு அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பை அடுத்து தமிழகத்தில் 12,700 பள்ளிகளில் பெற்றோரிடம் கருத்து கேட்கும் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இந்த கூட்டம் காலை, மதியம் என இரண்டுகட்டமாக நடத்தப்பட்டது. காலையில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கும், மதியம் 9, பிளஸ் 1 வகுப்புக்கும் நடத்தப்பட்டது. கருத்து தெரிவிக்க வரும் பெற்றோருக்கு கை கழுவ வசதிகள், கிருமி நாசினி, வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் சமூக இடைவெளியுடன் உட்கார வைக்க வேண்டும், பள்ளி வளாகங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து நேற்று காலை 9.30 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடக்கும் என்று பெற்றோருக்கு தெரியப்படுத்திய நிலையில், திங்கள் கிழமை என்பதால் பணிக்கு செல்வோர், தினசரி வேலைக்கு செல்வோர் யாரும் கருத்து கேட்பு கூட்டத்துக்கு வரவில்லை. பெரும்பாலும் பள்ளிக்கு அருகில் வசிக்கின்றவர்கள் மட்டுமே வந்திருந்தனர். அவர்களிடம் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து தெரிவிக்கும் வகையில், முழு விவரப் படிவங்கள் வழங்கப்பட்டன. அதை பெற்றோர் பூர்த்தி செய்து கொடுத்தனர். குறைந்த அளவில் தான் பெற்றோர் வந்திருந்தாலும் அவர்களில் பெரும்பாலனவர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் ஆர்வம் காட்டவில்லை. மேலும், தடுப்பு நடவடிக்கை மற்றும் கொரோனா முற்றிலும் நீங்கினால்தான் பள்ளிக்கு அனுப்புவோம் என்று சிலரும், தெரிவித்தனர். குறிப்பாக மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க மாட்டார்கள் அதனால் அனுப்ப முடியாது என்றும் பெரும்பாலான பெற்றோர் தெரிவித்தனர். ஒட்டுமொத்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். அதனால் பள்ளிகளை இப்போது திறக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். சிலர் மட்டுமே பள்ளிகள் திறக்க வேண்டும் என்று ெதரிவித்துள்ளனர். இதற்கிடையே, பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலர் முன்கூட்டியே பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி பள்ளிகள் திறக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவாக செயல்பட்டனர். இது பல ஊர்களில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. நேற்று மாலை வரை நடந்த இந்த கருத்து கேட்பு மாலை 5 மணிக்கு முடித்து வைக்கப்பட்டு, பெற்றோர் கொடுத்த படிவங்களை மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இன்று அந்த படிவங்கள் வந்து சேரும். அதற்கு பிறகு பள்ளிக் கல்வி இயக்குநருக்கு வரும். அவர், அரசுக்கு அறிக்கை அளிப்பார். அதன் அடிப்படையில் பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ஒரு உயர் அதிகாரி தெரிவித்தார். * தமிழகத்தில் 12,700 பள்ளிகளில் பெற்றோரிடம் கருத்து கேட்கும் கூட்டம் நேற்று நடந்தது. * திங்கட்கிழமை என்பதால் பணிக்கு செல்வோர் பலர் கருத்து கேட்பு கூட்டத்துக்கு வரவில்லை. * கூட்டத்துக்கு வந்த பெரும்பாலானோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் ஆர்வம் காட்டவில்லை. * பள்ளி கல்வித்துறைக்கு அறிக்கையாக தாக்கல் செய்யப்படுகிறது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews