அவசர சுற்றறிக்கை - பேரிடர் மேலாண்மை - கடலூர் மாவட்டம் - வடகிழக்கு பருவமழை 2020 - (23.11.2020 முதல் 27.11.2020 வரை) ஆகிய 5 நாட்களுக்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது - உடனுக்குடன் தகவல் தெரிவிக்க கோருதல் - தொடர்பாக - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 23, 2020

Comments:0

அவசர சுற்றறிக்கை - பேரிடர் மேலாண்மை - கடலூர் மாவட்டம் - வடகிழக்கு பருவமழை 2020 - (23.11.2020 முதல் 27.11.2020 வரை) ஆகிய 5 நாட்களுக்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது - உடனுக்குடன் தகவல் தெரிவிக்க கோருதல் - தொடர்பாக

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ந.க.ஆ 1/19000/2020
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாள் : 2| .11.2020
கடலூர்.
அவசர சுற்றறிக்கை
அய்யா / அம்மையீர்,
பொருள் : பேரிடர் மேலாண்மை - கடலூர் மாவட்டம் - வடகிழக்கு பருவமழை 2020 - (23.11.2020 முதல் 27.11.2020 வரை) ஆகிய 5 நாட்களுக்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது - உடனுக்குடன் தகவல் தெரிவிக்க கோருதல் - தொடர்பாக, பார்வை : 1. சென்னை வானிலை மைய அறிவிப்பு நாள் : 21.11.2020.
2. மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரை நாள் : 21.11.2020.
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. பார்வையில் காணும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பின்படி 23.11.2020, 24.11.2020, 25.11.2020, 26.11.2020 மற்றும் 27.11.2020 ஆகிய (5 நாட்கள்) அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அனைத்து மண்டல அலுவலர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுலவர்கள் அனைவரும், தங்களது தலைமை இடத்திலேயே இருந்து மேற்கூறிய தேதிகளில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகள் பற்றிய விவரங்களை உடனுக்குடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட ஆட்சியருக்காக,
கடலூர் பெறுநர் :

1. அனைத்து மண்டல அலுவலர்கள், கடலூர் மாவட்டம்.
2. அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள், கடலூர் மாவட்டம்.
3. அனைத்து நகராட்சி ஆணையர்கள், கடலூர் மாவட்டம்.
4. அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கடலூர் மாவட்டம்.
நகல் :
கூடுதல் தலைமைச் செயலர்/வருவாய் நிர்வாக ஆணையர், சேப்பாக்கம், சென்னை - அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.
நகல்
1. கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி முகமை, கடலூர்.
2. சார் ஆட்சியர், விருத்தாசலம்.
3. உதவி ஆட்சியர், சிதம்பரம்.
4. வருவாய் கோட்டாட்சியர், கடலூர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews