25.11.2020 நிவர் புயல் எதிரொலி பள்ளி வகுப்பறைகளை பயன்படுத்துவதற்கு ஏதுவாக பள்ளியின் சாவியை பள்ளி அருகில் இருக்கும் முக்கிய உள்ளூர் பிரமுகர்களிடம் ஒப்படைக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 23, 2020

Comments:0

25.11.2020 நிவர் புயல் எதிரொலி பள்ளி வகுப்பறைகளை பயன்படுத்துவதற்கு ஏதுவாக பள்ளியின் சாவியை பள்ளி அருகில் இருக்கும் முக்கிய உள்ளூர் பிரமுகர்களிடம் ஒப்படைக்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மசிக்கன தந்தி- 25.11.2020 நிவர் புயல் எதிரொலி பள்ளி வகுப்பறைகளை பயன்படுத்துவதற்கு ஏதுவாக பள்ளியின் சாவியை பள்ளி அருகில் இருக்கும் முக்கிய உள்ளூர் பிரமுகர்களிடம் ஒப்படைக்க உத்தரவு....
சிக்கனத்தந்தி
முதன்மைக் கல்வி அலுவலகம், திருவண்ணாமலை.
நகாண். 8088 | 11/2020, நாள். 23.11.2020
25.11.2020 அன்று அறிவித்துள்ள நிவர் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக (பேரிடர் காலங்களில்) பள்ளி வகுப்பறைகளை பயன்படுத்துவதற்காக உள்ளூர் பிரமுகர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் , எஸ்.எம்.சி பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கேட்கும் போது உடனடியாக வழங்குவதற்கு எதுவாக பாளியின் சாவியை உள்ளூர் பிரமுகர்கள் அல்லது உள்ளூர் ஆசிரியர்கள் எவரேனும் ஒருவரிடம் ஒப்படைத்து வைக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.) மேலும், பேரிடர் காலங்களில் மக்கள் தங்குவதற்கு அடிப்படை வசதியான குடிநீர் வசதி (குடிநீர் தொட்டியினை நிரப்பிவைத்தல்) , கழிவறைகள் (கந்தம் செய்தல் ) போன்றவற்றினை தயார் நிலையில் வைத்திடவும், துப்புரவு பணியாளர்களைக்கொண்டு பள்ளியினை தூய்மைப்படுத்திடவும் தெரிவிக்கப்படுகிறது. பேரிடர் காலங்களில் தேவை ஏற்படின் NSS மாணவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தெரிவிக்கப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews