மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை நடத்துவதில் பாரபட்சம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 23, 2020

Comments:0

மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை நடத்துவதில் பாரபட்சம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வு முறையில் பட்டவர்த்தனமாக மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருவது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மருத்துவக் கல்வி மேற்படிப்புக்கான நீட் - பி.ஜி. தேர்வில் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி, போபால், புவனேஷ்வர், நாக்பூர், பாட்னா, ஜோத்பூர், ராய்ப்பூர், ரிஷிகேஷ் ஆகிய நகரங்களில் உள்ள 8 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர், சண்டிகர் பிஜிஐஎம்இஆர், பெங்களூரு நிம்ஹான்ஸ் ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 11 மருத்துவக்கல்லூரிகளுக்குத்தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு தரப்பட்டுள்ளது. இதற்கு சொல்லப்பட்ட காரணம் இவை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என்பது. மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே தேசிய முக்கியத்துவம் பெற்றவையா, தமிழகத்தில் 355 ஆண்டுகளாக இயங்கி வரும் எம்.எம்.சி. போன்ற நிறுவனங்கள் முக்கியத்துவம் கொண்டதாக தெரியவில்லையா என்கிற விமர்சனம் எழுகிறது. இந்த 11 கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் இனி தனியாக INI CET (Institute of National Importance Combined Entrance Test) எனும் சிறப்பு நுழைவுத்தேர்வை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. முன்பு, நீட் பிஜி தேர்வு மட்டும் எழுதினால் போதும். ஏதாவது கல்லூரில் சேர்ந்து விடலாம். இனி இந்த 11 கல்லூரிகளில் சேர விரும்புபவர்கள் ‘இனி-செட்’ தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும். இதில் இடம் கிடைக்காவிட்டால் பிற மருத்துவக் கல்லூரிகளில் சேர நீட்-பிஜி எழுத வேண்டும். இது மாணவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். தவிர, தமிழகம் பின்பற்றிய இடஒதுக்கீடுகளை அனுமதிக்காத மத்திய அரசு, இந்த புதிய முறையில் ‘தேசிய முக்கியத்துவ நிறுவன’ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படித்த மாணவர்களுக்கு ‘இனி-செட்’ நுழைவுத் தேர்வில் உள்ஒதுக்கீடு வழங்கிக் கொள்ளலாம் என கூறியுள்ளது. இந்த பாரபட்சத்தை அனைத்து கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கடுமையாக கண்டித்து வருகின்றனர். நீட் தேர்வு முறையில் பட்டவர்த்தனமாக மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருவது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மருத்துவக் கல்வி மேற்படிப்புக்கான நீட் - பி.ஜி. தேர்வில் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி, போபால், புவனேஷ்வர், நாக்பூர், பாட்னா, ஜோத்பூர், ராய்ப்பூர், ரிஷிகேஷ் ஆகிய நகரங்களில் உள்ள 8 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர், சண்டிகர் பிஜிஐஎம்இஆர், பெங்களூரு நிம்ஹான்ஸ் ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 11 மருத்துவக்கல்லூரிகளுக்குத்தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு தரப்பட்டுள்ளது. இதற்கு சொல்லப்பட்ட காரணம் இவை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என்பது. மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே தேசிய முக்கியத்துவம் பெற்றவையா, தமிழகத்தில் 355 ஆண்டுகளாக இயங்கி வரும் எம்.எம்.சி. போன்ற நிறுவனங்கள் முக்கியத்துவம் கொண்டதாக தெரியவில்லையா என்கிற விமர்சனம் எழுகிறது. இந்த 11 கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் இனி தனியாக INI CET (Institute of National Importance Combined Entrance Test) எனும் சிறப்பு நுழைவுத்தேர்வை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. முன்பு, நீட் பிஜி தேர்வு மட்டும் எழுதினால் போதும். ஏதாவது கல்லூரில் சேர்ந்து விடலாம். இனி இந்த 11 கல்லூரிகளில் சேர விரும்புபவர்கள் ‘இனி-செட்’ தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும். இதில் இடம் கிடைக்காவிட்டால் பிற மருத்துவக் கல்லூரிகளில் சேர நீட்-பிஜி எழுத வேண்டும். இது மாணவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். தவிர, தமிழகம் பின்பற்றிய இடஒதுக்கீடுகளை அனுமதிக்காத மத்திய அரசு, இந்த புதிய முறையில் ‘தேசிய முக்கியத்துவ நிறுவன’ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படித்த மாணவர்களுக்கு ‘இனி-செட்’ நுழைவுத் தேர்வில் உள்ஒதுக்கீடு வழங்கிக் கொள்ளலாம் என கூறியுள்ளது. இந்த பாரபட்சத்தை அனைத்து கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கடுமையாக கண்டித்து வருகின்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews