தொலைதூரக் கல்வியை இணையவழியில் நடத்த அக்.31 வரை விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 19, 2020

Comments:0

தொலைதூரக் கல்வியை இணையவழியில் நடத்த அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொலைதூரக் கல்வி வகுப்புகளை இணையவழியில் நடத்த அக்.31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.திறந்தநிலை மற்றும் தொலைதூரக்கல்வி வகுப்புகளை இணையவழியில் நடத்துவதற்கான அனுமதியை உயா்கல்வி நிறுவனங்கள், அக்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பெற வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டிருந்தது. தற்போது உயா்கல்வி மையங்கள் விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தை யுஜிசி நீட்டித்துள்ளது. இதுகுறித்து யுஜிசி செயலா் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு: 2020-21-ஆம் கல்வியாண்டில் தொலைதூரக்கல்வி வகுப்புகளை இணையவழியில் நடத்துவதற்கான அனுமதி கோரி, அக்.31-ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பத்தின் நகல் பிரதியானது நவ.10-ஆம் தேதிக்குள் யுஜிசி அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews