தமிழகத்தில் 8 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ சீட் : கட் - ஆப் மதிப்பெண் அடிப்படையில் சொற்ப எண்ணிக்கையில் மருத்துவம் சேர வாய்ப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 22, 2020

Comments:0

தமிழகத்தில் 8 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ சீட் : கட் - ஆப் மதிப்பெண் அடிப்படையில் சொற்ப எண்ணிக்கையில் மருத்துவம் சேர வாய்ப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கடந்தாண்டு கடைபிடிக்கப்பட்ட கட்ஆப் மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்க்கையில் இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே மருத்துவ சீட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கினால் 300க்கும் மேற்பட்டோருக்கு வாய்ப்பு கிடைக்கும்.அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 16ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 35 நாட்களுக்கு மேலாகியும் கவர்னர், ஒப்புதல் வழங்காமல் உள்ளார். அதேசமயம் தமிழக கவர்னர் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்த பிறகே தமிழகத்தில் கவுன்சிலிங் நடைபெறும் என்று அரசு திட்டவட்டமாக அறிவித்தது.இந்த பரபரப்பான சூழ்நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், சட்ட நிபுணர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்தாண்டு கவுன்சிலிங்கில் கடைபிடிக்கப்பட்ட கட்ஆப் மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்தாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 8 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ கல்லூரியில் சீட் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு பொது பிரிவினருக்கு கட்ஆப் மதிப்பெண் 520 ஆக இருந்தது. அதேபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 360, பிற்படுத்தப்பட்டோருக்கு 470, மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 458 ஆக கட்ஆப் இருந்தது. இந்தாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 89 பேர் 300க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஆனால் கடந்தாண்டு கட் ஆப் மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்க்கும் போது, இதில் 8 பேருக்கு மட்டுமே மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், சுமார் 300க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ கல்லூரி சீட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews