இன்ஜி., பொது கவுன்சிலிங் நிறைவு 91 ஆயிரம் இடங்களுக்கு ஆள் இல்லை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 29, 2020

Comments:0

இன்ஜி., பொது கவுன்சிலிங் நிறைவு 91 ஆயிரம் இடங்களுக்கு ஆள் இல்லை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை பொதுப் பிரிவு கவுன்சிலிங், நேற்று முடிந்தது. இதுவரை, 72 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 91 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டில் சேர, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கில், 1.12 லட்சம் பேர் அனுமதிக்கப்பட்டனர். மொத்தம், 461 கல்லுாரிகளில், 1.63 லட்சம் இடங்களில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டது. முதலில், மாற்று திறனாளிகள், விளையாட்டு பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு, ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில், 497 பேர் இடங்களை தேர்வு செய்தனர். பின், தொழிற்கல்வி பிரிவில், 946 பேர் இட ஒதுக்கீடு பெற்றனர். இதையடுத்து, பொதுப்பிரிவு கவுன்சிலிங், அக்., 8ல் துவங்கியது. முதல் சுற்றில், 7,510 பேர்; இரண்டாம் சுற்றில், 13 ஆயிரத்து, 415; மூன்றாம் சுற்றில், 20 ஆயிரத்து, 999 பேர் இடங்களை தேர்வு செய்தனர். நான்காம் சுற்று, நேற்று முடிந்தது. இதில், 27 ஆயிரத்து, 828 பேர் இடங்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். பொது பிரிவில், மொத்தம் நான்கு சுற்றுகளில், 69 ஆயிரத்து, 752 பேர் இன்ஜி., படிப்பில் சேர்ந்துள்ளனர்.தொழிற்கல்வி மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகளையும் சேர்த்து, 71 ஆயிரத்து, 195 பேர் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளனர். அதாவது, மொத்தம் உள்ள, 1.63 லட்சம் இடங்களில், 44 சதவீத இடங்களில் தான் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மீதம், 56 சதவீதமான, 91 ஆயிரத்து, 805 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. கம்ப்யூட்டருக்கு மவுசுசிவில், மெக்கானிக்கல் சரிவு! இந்த ஆண்டு, கொரோனா தொற்று பிரச்னைகளுக்கு நடுவில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. தற்போது, பெரும்பாலான பணிகள், 'ஆன்லைனில்' நடப்பதால், கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பாடப்பிரிவுகளுக்கு, மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவிலும் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.முந்தைய காலங்களில் முன்னணியில் இருந்த மெக்கானிக்கல், சிவில் போன்றவை, இந்த ஆண்டு பெரும் சரிவை சந்தித்துள்ளன. அவற்றில் காலியிடங்கள் அதிகரித்துள்ளன. அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரிகளில், தமிழ் வழி பாடப்பிரிவுகள் காலியாக உள்ளன.
கடந்த ஆண்டை விடஅட்மிஷன் குறைவு! கடந்த ஆண்டு பொது கவுன்சிலிங் முடிவில், மொத்தம், 78 ஆயிரத்து, 131 இடங்கள் நிரம்பின. அதை விட இந்த ஆண்டு, 7,000 இடங்கள் குறைவாக, 71 ஆயிரத்து, 195 இடங்களே நிரம்பி உள்ளன.மேலும், 2019ம் ஆண்டில், 1 லட்சத்து, 72 ஆயிரத்து, 940 இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்பட்டதில், 94 ஆயிரத்து, 809 இடங்கள் காலியாக இருந்தன. ஆனால், கடந்த ஆண்டை விட, 10 ஆயிரம் இடங்கள் குறைவாக, இந்த ஆண்டில், 1.63 லட்சம் இடங்களுக்கே, கவுன்சிலிங் நடத்தப்பட்டது. அதில், 92 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews