ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) 55 வயதிலும் எழுதலாம்; ஆனால் 40 வயதுக்கு மேல் ஆசிரியர் ஆக முடியாது என்ற கல்வித்துறையின் முரண்பட்ட உத்தரவு கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.
அதன் மாநில தலைவர் கே.பி.ஓ.,சுரேஷ், பொது செயலாளர் மனோகரன் தெரிவித்து உள்ளதாவது: தமிழகத்தில் 40 வயதுக்கு மேல் இனி ஆசிரியர் பணி நியமனம் இல்லை என்ற அரசு உத்தரவால் லட்சக்கணக்கானோர் ஆசிரியர் கனவு கலைந்துள்ளது. எந்த மாநிலத்திலும் ஆசிரியருக்கு வயது வரம்பு இல்லை. மத்திய, மாநில அரசுகள் நடத்தும் டி.இ.டி.,யில் 55 வயதில் கூட தேர்வு எழுதலாம்; ஆனால் அவர் தேர்ச்சி பெற்றால் இனி ஆசிரியர் ஆக முடியாது. இது முரண்பாட்டின்உச்சம்.2013 டி.இ.டி.,யில் 80 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றும் ஏழு ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லை.
இதனால் மீண்டும் டி.இ.டி., எழுதவுள்ளனர். இவர்களில் பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்கள். ஏழு ஆண்டுகளாக நியமனம் கிடைக்காததற்கு யார் பொறுப்பு. அரசு பள்ளிகளில் 12,000 ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.அதன்படி அடுத்த சில ஆண்டுகளுக்கு ஆசிரியர் நியமனம் இருக்காது எனும் நிலையில் இப்போது 35 வயதை கடந்த எவருக்கும் இனி ஆசிரியர் வாய்ப்பு இருக்காது. ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாத நிலையில் எதற்காக இந்த வயது உச்ச வரம்பு நிர்ணயம். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,என தெரிவித்துள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.