பல்கலைக்கழகம், கல்லூரிகள் விரும்பினால் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் : உச்ச நீதிமன்றம் மீண்டும் அதிரடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 03, 2020

பல்கலைக்கழகம், கல்லூரிகள் விரும்பினால் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் : உச்ச நீதிமன்றம் மீண்டும் அதிரடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பல்கலைக்கழகம், கல்லூரிகள் விருப்பப்பட்டால் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுகளின் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் நேற்று மீண்டும் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கின் பின்னணி கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களும் பள்ளி பொதுத் தேர்வுகளை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்து விட்டது. இதில் இந்த மாதம் 30ம் தேதிக்குள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவித்த யுஜிசி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களை சார்ந்த 31 மாணவர்கள் யு.ஜி.சியின் மேற்கண்ட உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 28ம் தேதி ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில்,'கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய முடியாது. அதனால் நடத்த தடை இல்லை. மேலும் தேர்வுகளை நடத்தாமல் மாணவர்களை தேர்ச்சிப் பெற செய்யாதீர்கள். என தீர்ப்பு வழங்கியதோடு அதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர். இதனால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு நடத்துவது என்று மீண்டும் ஒருமுறை உறுதியாகியது. உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய பொதுநல மனு தாக்கல் இந்த நிலையில் மாணவர்கள் அமைப்புகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,'கொரோனா நோய் தொற்று அதிகமாக இருக்கும் இந்த வேலையில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளின் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த முன்வருகின்றனர். அதனால் மாணவர்களின் நலனை அடிப்படையாக் கொண்டு அதனை ரத்து செய்தோ அல்லது வைரஸ் தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வந்தவுடன் தேர்வை நடத்துமாறோ நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் அமைப்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுவில் உள்ள சாராம்சங்களை நீதிபதிகள் முன்னிலையில் விளக்கினார். ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். இதையடுத்து உத்தரவில்,'முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் விரும்பினால் அவர்கள் நடத்திக் கொள்ளலாம். ஆனால் அதில் யு.ஜி.சியின் அனைத்து விதிமுறைகளும் கண்டிப்பாக உட்பட்டு இருக்க வேண்டும். அதேப்போன்று பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக மாணவர்கள் அமைப்பு தரப்பில் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews