அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 03, 2020

அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'அரசுப் பணிகளில், இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படக் கூடாது, தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தமிழக நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் இருவரது வழக்கில், 'பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது.இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவில், 'இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசின் சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.'அரசு பணியிடங்களில், இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படக் கூடாது, தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்' என,நீதிமன்றம் உத்தரவிட்டது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews