ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 74 சதவீத மாணவர்கள் பங்கேற்பு மத்திய அமைச்சர் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 11, 2020

ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 74 சதவீத மாணவர்கள் பங்கேற்பு மத்திய அமைச்சர் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஜேஇஇ முதல்நிலைத் தேர்வை, விண்ணப்பித்த மாணவர்களில் 74 சதவீதம் பேர் எழுதியுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: ஜேஇஇ முதல் நிலைத் தேர்வுக்கு விண்ணப்பித்த 8.58 லட்சம் மாண வர்களில் 6.35 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தந்த மாநில அரசுகளுக்கு பாராட் டுகளைத் தெரிவிக்கிறேன். மேலும், இந்தத் தேர்வில் பங்கேற்காத மாண வர்களில் சிலர், கடந்த ஜனவரி மாதத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று இருக்கலாம். அதனால் தற்போதைய தேர்வை அவர்கள் தவிர்த்திருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜேஇஇ தேர் வுக்கு விண்ணப்பித்த மாணவர் களில் 94 சதவீதம் பேர் எழுதினர். இதற்கிடையே, முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் அடுத்த வாரத்தில் வெளியிடப்பட உள்ள தாக கூறப்படுகிறது. அதன் தேர்ச்சி பட்டியலில் இடம்பெறும் முதல் 2.45 லட்சம் மாணவர்கள், செப். 27-ம் தேதி நடைபெறும் ஜேஇஇ பிரதானத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews