110 விதியின் கீழ் TET புத்தாக்கப்பயிற்சி அறிவிப்பு அரசாணை வேண்டும்: முதலமைச்சருக்கு வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 02, 2020

110 விதியின் கீழ் TET புத்தாக்கப்பயிற்சி அறிவிப்பு அரசாணை வேண்டும்: முதலமைச்சருக்கு வலியுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்திலேயே, பணியில் உள்ள சிறுபான்மையினர் அற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு, 110 விதியின் கீழ் TET புத்தாக்கப்பயிற்சி அறிவிப்பு அரசாணை வேண்டும்: முதலமைச்சருக்கு வலியுறுத்தல் RTE Act அடிப்படையில் 23/08/2010 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெறுபவர்கள் TET கட்டாயம் என்ற சூழல் உள்ளது. தமிழகத்தில் RTE அமலாக்கம் அரசாணை எண் 181 அடிப்படையில் இருந்தாலும், தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரின் 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள் அடிப்படையில் TET கட்டாயம் என்ற நிபந்தனைகள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. அதனால் 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட சுமார் 1700 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் TET கட்டாயம் எனவும் , (அரசு பள்ளிகள் மற்றும் மைனாரிட்டி பள்ளிகள் ஆசிரியர்களுக்கும் TET தேவை இல்லை என்று கூறப்படுகிறது) 23/8/10 முதல் 16/11/12 வரையில் TET பற்றிய புரிந்தல் இன்றி பணி நியமனத்திற்கு அனுமதி அளித்த அனைத்து அதிகாரிகளினால், தற்போது வரை சுமார் 1700 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட சூழல் ஒருபுறம் இருக்க, TET நிபந்தனைகளில் கொண்டு வரப்பட்ட ஆசிரியர்கள் ஏறக்குறைய கடந்த பல ஆண்டுகள் பல்வேறு பலன்கள் இல்லாமல் சிக்கலான சூழலில், பணிப் பாதுகாப்பு இல்லாமல் மன வருத்தத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர். பல்வேறு சிக்கல்கள் நிறைந்த இந்த TET பிரச்சினைகளை களையும் விதமாகவும், பணியில் உள்ள (TET சிக்கலில் உள்ள) ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வண்ணம் முடிவுகளை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரைகளை பலமுறை வழங்கியுள்ளது. தமிழக அரசும் பாதுகாப்பு நிச்சயம் தரும் எனவும், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அல்லது சிறப்பு தேர்வு விரைவில் நடத்தப்படும் எனவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்தார். அதன் பிறகுதான் இந்த TET சிக்கலில் இருந்த ஆசிரிய குடும்பங்கள் சற்றே நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆயினும் இன்று வரை முழுமையான அரசானை பிறப்பிக்கப்படவில்லை. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews