சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 07, 2020

சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் 63,412 பள்ளி சத்துணவு மையங்கள் உள்ளது. இந்த மையங்களில் தினமும் 46 லட்சம் பள்ளி மாணவர்கள் சாப்பிட்டு வருகின்றனர். இதில், 41 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். 12 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த நிலையில் சத்துணவு மையங்களில் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ள அரசாணையில், ஒவ்வொரு சத்துணவு மையத்திற்கும் ஒரு சத்துணவு அமைப்பாளர், ஒரு சமையலர், ஒரு சமையல் உதவியாளர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. CLICK HERE TO READ OFFICIAL NEWS சத்துணவு அமைப்பாளர்கள் 60 வயதிலும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் 58 வயதிலும் பணியில் இருந்து வயது முதிர்வினால் ஓய்வு பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சத்துணவு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் உள்ள சூழ்நிலையில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், மற்றும் முககவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி குறைவான எண்ணிக்கையில் விண்ணப்பத்தாரர்களை அழைத்து நேர்முகத் தேர்வுகளை நடத்த வேண்டியது கட்டாயமாகிறது. CLICK HERE TO READ OFFICIAL NEWS எனவே, சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுகளை நடத்தி, தகுதி வாய்ந்த நபர்களை மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பரிந்துரை செய்ய (சென்னை மாவட்டம் நீங்கலாக) தேர்வுக்குழுக்கள் அமைக்கப்படுகிறது. தேர்வுக்குழு 1 க்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உறுப்பினராகவும் இருப்பார்கள். தேர்வுக்குழு 2க்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(ஊரக வளர்ச்சி) தலைவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாச்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உறுப்பினராகவும் இருப்பார்கள். தேர்வுக்குழு 3க்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) தலைவராகவும், சம்பந்தப்பட்ட வட்டாச்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உறுப்பினராகவும் இருப்பார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews