ஏழை மாணவருக்கான கல்வி செலவு அதிகாரி விளக்கம் அளிக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 05, 2020

ஏழை மாணவருக்கான கல்வி செலவு அதிகாரி விளக்கம் அளிக்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட, ஏழை எளிய மாணவர்களுக்கான, கல்வி செலவு நிலுவைத் தொகையை வழங்காதது குறித்து, பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர் விளக்கம் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒவ்வொரு தனியார் பள்ளியிலும், 25 சதவீத இடங்கள், ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இவர்களுக்கான கல்வி கட்டணத்தை, அரசு ஏற்க வேண்டும்.மறு நிர்ணயம்கடந்த, 2016 - 17ம் ஆண்டு, ஒரு மாணவருக்கான கல்வி செலவு தொகை, 25 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. அதுவே, அடுத்த கல்வியாண்டில், 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:மாணவர்களுக்கான கல்வி செலவு தொகையை, 2017 முதல், 2019 வரைக்கும் மறு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும். மாணவர்கள் சேர்ந்த பின், ஜூன் மாதத்தில், 50 சதவீதம்; டிசம்பரில், 25 சதவீதம்; மீதி தொகையை ஏப்ரலில், தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
அவகாசம் மனுவை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், '2017 முதல், 2020 வரையான கல்வியாண்டில் வழங்க வேண்டிய, கல்வி செலவு நிலுவைத் தொகையை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, ஆறு வாரங்களில், அரசு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார். மறு நிர்ணயம் குறித்தும், கல்வி செலவு தொகை எப்படி குறைந்தது என்பதற்கும், அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு இருந்தார். வழக்கு, நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த, அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இரு முறை அவகாசம் வழங்கியும், நிலுவை தொகை வழங்கவில்லை எனக் கூறிய நீதிபதி, விசாரணையை, வரும், 28க்கு தள்ளி வைத்தார். அன்று, பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர் விளக்கம் அளிக்க, நீதிபதி உத்தரவிட்டார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews