மகனின் கல்விக்காக தந்தை 105 கி.மீ சைக்கிள் பயணம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 20, 2020

மகனின் கல்விக்காக தந்தை 105 கி.மீ சைக்கிள் பயணம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ம.பி., மாநிலத்தில் மகனின் கல்விக்காக தந்தை 105 கி.மீ பயணம் செய்து கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி உள்ளார்.
ம.பி., மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்த பேடிபூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷோபிராம். படிக்காதவர். இவரது மகன் 10ம்வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருகிறான். ம.பி., மாநில அரசு ,10ம் வகுப்பு மாணவர்களுக்காக சிறப்பு துணை தேர்வு நடத்த ருக் ஜன நஹின் திட்டம் கொண்டு வந்தது. இதற்கான தேர்வு மையம் தார்நகரில் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வை விட்டு விட்டால் தனதுமகனுக்கு ஒரு வருடம் வீணாகும் என்பதை உணர்ந்த ஷோபிராம் தனது மகனை எப்படியும் தேர்வு மையத்திற்கு அழைத்து செல்வது என முடிவு செய்தார் . தற்போது மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.இதன்காரணமாக பொது போக்குவரத்து முடங்கியது. இதனையடுத்து தனது கிராமத்தில் இருந்து 105 கி.மீ தொலைவில் உள்ள தார் நகரத்திற்கு மகன் ஆஷிஷை சைக்கிளில் உட்கார வைத்து அழைத்து வந்தார். இது குறித்து ஷோபிராம் கூறியதாவது:முதல் முயற்சியில் தேர்ச்சி பெற முடியாத பாடங்களை எழுதுவதற்கு அரசு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பஸ் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அரசு வழங்கி உள்ள இந்த வாய்ப்பை நான் தவறவிட்டிருந்தால், என் மகன்கள் ஒரு வருட கல்வி வீணாகியிருக்கும். எங்களிடம் பணம் வசதியோ ஒரு மோட்டார் சைக்கிளோ கூட இல்லை. உதவுவதற்கு யாரும் இல்லை. அதனால் என் மகனின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, சைக்கிளில் தேர்வு எழுதுவதற்காக அவரை தார் அழைத்து வந்தேன். இரண்டு மூன்று நாட்கள் தாரில் தங்குவதற்கு ஏற்ற வகையில் உணவுப்பொருட்களை எங்களுடன் எடுத்துச் சென்றோம். திட்டமிட்ட படி தேர்வுமையத்திற்கு சென்று சேர்ந்தோம் என கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews