அரசு கல்லூரிகளில் சேர இணையவழி மூலம் விண்ணப்பம்: கால நீட்டிப்பு செய்ய கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 18, 2020

Comments:0

அரசு கல்லூரிகளில் சேர இணையவழி மூலம் விண்ணப்பம்: கால நீட்டிப்பு செய்ய கோரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்வதற்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறன் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அந்தச் சங்கம் வெளியிட்ட அறிக்கை: நடப்பு கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர முழுமையாக இணையவழி மூலமாக, விண்ணப்ப முறையை கல்லூரி கல்வித்துறை அமல்படுத்தியது. ஜூலை 21-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 11 நாள்கள் மட்டுமே அவகாசம் கொடுத்தது. இந்தக் கெடு தேதியானது, மலைப்பகுதியில் உள்ள குக்கிராமங்கள், தொலைதூர குக்கிராமங்களுக்கு முழுமையாக சென்று சேரவில்லை.பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், கிராமப்புறங்களில் போதுமான இணைய வசதி செயல்பாடு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான மாணவா்கள் குறித்த நேரத்தில் இணையவழி மூலமாக விண்ணப்பிக்க முடியாமல் போகியுள்ளது. இதில், மாற்றுத்திறன் மாணவா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். அரசு கலை, கல்லூரிகளில் சேர வாய்ப்பிருந்தும் குறித்த நேரத்தில் விண்ணப்பிக்க முடியாத ஏழை மாணவா்கள் தனியாா் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.எனவே, இணையவழி மூலமாக விண்ணப்பிக்க ஒரு வார கால அவகாசம் நீட்டிக்க வேண்டும். மேலும் கிராமப்புற ஏழை மாணவா்கள் அரசு கல்லூரிகளில் சேர வாய்ப்பு அளிக்க கல்லூரி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வா் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews