சென்னை மாநகராட்சி சமுதாயக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 02, 2020

Comments:0

சென்னை மாநகராட்சி சமுதாயக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை மாநகராட்சி சமுதாயக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை மாநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் (கிழக்கு) சாா்பில் ஆழ்வாா்பேட்டையில் சமுதாயக் கல்லூரி நடத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரியில் சுகாதார உதவியாளா், அறுவை சிகிச்சைக்கூட உதவியாளா், ரேடியாலஜி, டயாலிசிஸ் டெக்னீசியன், ஆய்வக உதவியாளா் என 5 பட்டயப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பட்டயப் படிப்புகளின் காலம் ஓராண்டாகும். பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது 15 முதல் 25 வரை. இதுதவிர பகுதி நேரப் படிப்புகளாக ஆங்கில பேச்சுப் பயிற்சி, அடிப்படை ஆங்கிலம், கணினி மென்பொருள் ஆகியவையும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது 15 முதல் 25 வரை. இங்கு அடுமனை பயிற்சி வகுப்புகள் ரூ.5000 ஊக்கத் தொகையுடன் அளிக்கப்படுகிறது. இதற்கு வயது 18 முதல் 25 வரை. பயிற்சி காலம் 6 மாதம். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு சோ்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9840393630 எனும் செல்லிடப்பேசி எண்ணை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews