பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - 2020-2021ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை - நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு சட்டவிதிகள் பாடப்பிரிவு வாரியாக (Group-wise) கடைபிடித்தல் - சார்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள். 12.08.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 12, 2020

Comments:0

பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - 2020-2021ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை - நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு சட்டவிதிகள் பாடப்பிரிவு வாரியாக (Group-wise) கடைபிடித்தல் - சார்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள். 12.08.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -600 006
ந.க.எண்.88979/டபிள்யு1/இ1/2016 நாள். 12.08.2020

பொருள்
பார்வை
பள்ளிக் கல்வி -மேல்நிலைக்கல்வி- 2020-2021 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை - நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு சட்டவிதிகள் பாடப்பிரிவு வாரியாக (Group-wise) கடைபிடித்தல் - சார்பு 1. அரசு ஆணை (நிலை) எண். 587, பள்ளிக் கல்வித்துறை நாள். 22.3.1978.
2. அரசாணை (நிலை) எண். 42 கல்வித்துறை, நாள் 12.01.1994
3. தமிழ்நாடு சட்டம் 45/1994
4. தமிழ்நாடு சட்டம் 33/2007
5. தமிழ்நாடு சட்டம் 4/2009
6. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.88979/டபிள்யு1/இ1/2016 நாள். 28.04.201723.5.2o|s,
7.மாநில ஆதி திராவிட நல குழு உறுப்பினர் திரு.எஸ்.செல்வகுமார் என்பவரின்06.08.2020 நாளிட்ட கடிதம்.
பார்வை-1 மற்றும் 2ல் காணும் அரசாணைகளின்படி மேல்நிலைப்பள்ளிகள் அங்கீகாரம் வழங்கும் விதிகளில், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது, அவ்வப்பொழுது நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு விதிகள் பாடப்பிரிவு வாரியாக(Group-wise) கடைபிடிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2. பார்வை-3, 4 மற்றும் 5ல் குறிப்பிடப்பட்டுள்ள இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களின்படி, 2020-2021 ஆம் கல்வியாண்டிலும் மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் பொழுது, மாநிலத்தின் அதிகார வரம்பிற்குள் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் - (சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக) பழங்குடியினர், ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கீழ்க்காணும் விகிதத்தில் கடைபிடிக்கப்பட வேண்டும்.
3. மேற்கண்ட அட்டவணையில் தெரிவித்துள்ளவாறு மாணவர் சேர்க்கையின்போது பொதுப்பிரிவினர்க்கான 31% இடத்திற்கான பட்டியல் முதலில் தயாரிக்கப்பட வேண்டும். இதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்கிடவும், பொதுப்பிரிவினர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற எவ்வித பாகுபாடின்றி தயாரித்திடவும் அறிவுறுத்தப்படுகிறது. அதன் பின்னர் அந்தந்த பிரிவுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.
4. மாநிலத்தின் அதிகாரவரம்பிற்குள் செயல்படும் அனைத்துவகை பள்ளிகளிலும் (சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக) பாடப் பிரிவு வாரியாக (Group-wise) மேற்கூறப்பட்ட விகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மேல்நிலைக்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. அனைத்துப் பள்ளிகளுக்கும் இச்செயல்முறை ஆணையினை அனுப்பி ஒப்பம் பெற்று தங்கள் கோப்பில் வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், மேற்கூறியவாறு அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிக் கல்வி இயக்குநர்
பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews