SI தேர்வுக்கு எதிர்ப்பு: தேர்வு வாரியத்துக்கு நோட்டீஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 21, 2020

Comments:0

SI தேர்வுக்கு எதிர்ப்பு: தேர்வு வாரியத்துக்கு நோட்டீஸ்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எஸ்.ஐ., தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தாக்கலான வழக்கில், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலுாரை சேர்ந்த, தென்னரசு தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், போலீஸ், எஸ்.ஐ., பணி தேர்வு அறிவிப்பை, 2019 மார்ச்சில் வெளியிட்டது. 2020 ஜனவரி, 12 மற்றும், 13ல் எழுத்துத் தேர்வு நடந்தது. குறிப்பிட்ட தேர்வு மையத்தில் எழுதியவர்களில், அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்விற்கு முன் வினாக்கள் கசிய விடப்பட்டன. ஒரே அறையில் கலந்தாலோசித்து, ஓ.எம்.ஆர்., விடைத்தாள்களை மாற்றி, தேர்வெழுதியுள்ளனர்.
இதற்கு, தேர்வறை கண்காணிப்பாளர்களே உதவியுள்ளனர். தேர்வறைகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தவில்லை.தமிழக உள்துறை செயலர், சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவருக்கு புகார் அனுப்பினேன். எழுத்துத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார்.அரசுத் தரப்பில், '௧ லட்சத்து, 70 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். மார்ச்சில் முடிவுகள் வெளியாயின. மனுதாரர், யூகத்தின் அடிப்படையில், ஆதாரமின்றி மனு செய்துள்ளார்' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தரப்பில், ஜூலை, 31ல் பதில் மனு செய்ய, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews