JEE முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறையில் மாற்றம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 23, 2020

Comments:0

JEE முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறையில் மாற்றம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. JEE Main தேர்வுடன் 12ஆம் வகுப்பு தேர்வில் 75% மதிப்பெண் அவசியம் என்ற விதியில் தளர்வு அறிவிப்பு - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வர்களுக்கு சலுகை அறிவித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, ஜேஇஇ முதல்நிலைத் தேர்வர்கள் கவனத்துக்கு..என்ஐடி, மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவதோடு, பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 75% மதிப்பெண் பெறுவது கட்டாயம் என்ற விதிமுறை தளர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார்.75% மதிப்பெண் அவசியம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டு, பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழே போதுமானது என்ற வகையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதுஏற்கனவே ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வர்களுக்கும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
JEE தேர்வு:
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் அதாவது ஐஐடி-க்களில் மாணவர்கள் படிக்க வேண்டுமெனில், கூட்டு சேர்க்கை வாரியம் எனப்படும் JEE நடத்தும் மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, முதல் 20 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டிருந்தது. JEE தளர்த்தியுள்ள புதிய அறிவிப்பு:
JEE மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறும் தகுதிவாய்ந்த மாணவர்கள், 12-ம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் பிரச்சினையில்லை என்று IIT மாணவர்கள் சேர்க்கைக்கான விதிமுறைகளை இந்த ஆண்டில் JEE தளர்த்தியுள்ளது. 12-ம் வகுப்பில் சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews