தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம்: வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 18, 2020

Comments:0

தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம்: வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு, தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்கும்படி, கல்வி கட்டண கமிட்டி அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள சுயநிதி தனியார் பள்ளிகள், கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, கல்வி கட்டண நிர்ணய குழு, பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, ஒவ்வொரு பள்ளிக்கும், கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும். தமிழகத்தில் உள்ள, 6,000 சுயநிதி பள்ளிகளுக்கான கல்வி கட்டணம், கடந்த கல்வி ஆண்டுடன் முடிகிறது. இதையடுத்து, புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி, பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, 6,000 தனியார் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டம் தவிர்த்து, தமிழகத்தில் உள்ள அனைத்து சுயநிதி பள்ளிகளும், நடப்பு கல்வி ஆண்டு முதல், மூன்றாண்டு களுக்கு தங்களுக்கான செலவினங்கள் அடிப்படையில், கல்வி கட்டணத்துக்கான கருத்துருவை அனுப்ப வேண்டும்.கல்வி கட்டண கமிட்டியின், www.tnfeecommittee.com என்ற இணையதளத்தில், வரும், 20ம் தேதி முதல், செப்டம்பர், 25ம் தேதி வரை, இதை பதிவேற்றம் செய்யலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் தங்களுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள 20ம் தேதி முதல் விண்ணப்பங்களை கொடுக்கலாம் என்று தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இயங்கும் சுயநிதி தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த கடந்த 2008ம் ஆண்டு கட்டண நிர்ணயக் குழுவை அரசு அமைத்தது. இந்த குழுவின் முதல் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் நியமிக்கப்பட்டார். அப்போது தனியார் பள்ளிகளின் வரவு செலவு கணக்குகளை பெற்று அதற்கேற்ற வகையில் அந்தந்த பள்ளிகளுக்கான கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் வரை ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி கட்டணக் குழுவின் தலைவராக இருந்தார். அவரது பணிக்காலம் மார்சுடன் முடிந்ததை அடுத்து, தற்போது அடுத்த 3 ஆண்டுக்களுக்கான தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியம் ஜூலை 1ம் தேதி நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற பிறகு தற்போது 2020-2021ம் கல்வி ஆண்டு முதல் 2022-2023ம் கல்வி ஆண்டு வரையிலான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் பணியை தொடங்கியுள்ளார். இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கட்டணக் குழுவின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், தனியார் பள்ளிகள் அடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். 20ம் தேதி முதல் விண்ணப்பங்களை கட்டணக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்தந்த பள்ளிகளின் 2019-2020ம் கல்வி ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை வரும் 20ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதிக்குள் www.tnfeecommittee.com என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நேரடியாகவும் விண்ணப்பங்களை கட்டண குழு அலுவலத்துக்கு அனுப்பலாம். செப்டம்பர் 25ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews