எஸ்.ஐ., தேர்வை ரத்து செய்ய வழக்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 18, 2020

Comments:0

எஸ்.ஐ., தேர்வை ரத்து செய்ய வழக்கு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
போலீஸ், எஸ்.ஐ., எழுத்து தேர்வை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற கிளையில், வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
மதுரை, மேலுார் தென்னரசு தாக்கல் செய்த மனு:தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், போலீஸ், எஸ்.ஐ., பணி தேர்வுக்கான அறிவிப்பை, 2019 மார்ச்சில் வெளியிட்டது. 2020 ஜனவரி 12, 13ல் எழுத்துத் தேர்வு நடந்தது.குறிப்பிட்ட தேர்வு மையத்தில் எழுதியவர்களில், அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்விற்கு முன் வினாக்கள் கசியவிடப்பட்டுள்ளன. ஒரே அறையில் கலந்தாலோசித்து, ஓ.எம்.ஆர்., விடைத்தாள்களை மாற்றி தேர்வெழுதி உள்ளனர். முறைகேடாக தேர்வெழுத, தேர்வறை கண்காணிப்பாளர்களே உதவிஉள்ளனர். தேர்வறைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவில்லை. உள்துறை செயலர், சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவருக்கு புகார் அனுப்பினேன்.எழுத்துத்தேர்வு நடந்ததை ரத்து செய்ய வேண்டும். புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் விசாரணைக்கு வரும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews