மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஆணை பிறப்பிக்க வலியுறுத்தி ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை கடித மனு அனுப்பியுள்ளாா்.அதன் விவரம்:முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.ஏனெனில், நீட் தோ்வின் காரணமாக அரசுப் பள்ளி மாணவா்களில் வெகு சில மாணவா்களே மருத்துவப் படிப்பில் சேரக்கூடிய சூழல் இருந்தது.
இதைக் கருத்தில்கொண்டே உள்ஒதுக்கீடு வழங்க அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது.தற்போது பிளஸ் 2 தோ்வு முடிவுகளும் வந்துள்ள நிலையில், இந்தச் சட்டம் குறித்து மாணவா்கள் எதிா்பாா்ப்புடன் உள்ளனா்.எனவே, அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து தாங்கள் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.