WhatsApp Groupகளில் தமிழக அரசு குறித்து அவதூறு; ஆசிரியர்களிடம் விசாரணை - கல்வி அதிகாரிகள் அதிரடி. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 18, 2020

1 Comments

WhatsApp Groupகளில் தமிழக அரசு குறித்து அவதூறு; ஆசிரியர்களிடம் விசாரணை - கல்வி அதிகாரிகள் அதிரடி.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசு குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பிய தொடர்பாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதமாகி வருகிறது .இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன .அதேசமயம் அரசுப் பள்ளி ஆசிரியர்களை பொறுத்தவரை கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலும் பாடம் சார்ந்த பயிற்சிகளிலும் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சேலம் மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் வாட்ஸ்அப் குரூப்களில் தமிழக அரசு குறித்த அவதூறு பரப்பிய விவகாரம் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது .இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில் சேலம் மாவட்ட ஆசிரியர்கள் பல்வேறு விதமான வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி அதன் மூலம் கல்வி சார்ந்த மற்றும் பிற பயனுள்ள தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஓரிரு ஒன்றியங்களை சேர்ந்த தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் மீம்ஸ் தொடர்பான ஒரு குழுவை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது .சமீப காலமாக அந்தக் குழுவில் தமிழக அரசு பற்றியும் முதல்வரைப் பற்றியும் கேலிக்குள்ளான வகையில் அவதூறு பரப்பப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து குழுவில் உள்ள ஆசிரியர்கள் சிலர் ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .அவரின் உத்தரவின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் . இதில் சில விவகாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவதூறு தொடர்பாக வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் முடிவில் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் .தமிழக அரசை அவதூறு செய்ததற்காக ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்கினால் இப்படித்தான் பேசுவாங்க.. கொரோனா டியூட்டி போடுங்க .இல்ல சம்பளத்தை கட் பண்ணி நோ வொர்க், நோ பே ன்னு சொல்லுங்க..

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews