சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள் இனி சொந்த மாநிலத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்யலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 16, 2020

Comments:0

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள் இனி சொந்த மாநிலத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்யலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வு மே 31ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், கடந்த மார்ச்சில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இத்தேர்வு அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்தது. அதேநேரம், கடந்தாண்டு நடந்த சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வை வருகிற 20ம் தேதி முதல் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், சிவில் சர்வீஸ் நேர்முக தேர்வுக்கு தேர்ச்சி பெறுபவர்கள், விதிகளின்படி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
இதுவரையில் இந்த பரிசோதனை டெல்லியில் உள்ள மருத்துவமனையில் மட்டும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விதிமுறையை மத்திய பணியாளர் அமைச்சகம் நேற்று முன்தினம் திருத்தம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘கொரோனா தொற்று நிலையை கருத்தில் கொண்டு டெல்லி மருத்துவமனையில் மட்டுமின்றி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள குறிப்பிடப்பட்ட அரசு மருத்துவமனைகளில் தேர்வர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும்,’ என கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews