இணைய வழியில் பாலின சமத்துவம் தொடா்பான கருத்தரங்குகள் நடத்த கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 28, 2020

Comments:0

இணைய வழியில் பாலின சமத்துவம் தொடா்பான கருத்தரங்குகள் நடத்த கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இணைய வழியில் பாலின சமத்துவம் தொடா்பான கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு செயலாளா் ரஜினிஷ் ஜெயின், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: கரோனா பரவலின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் பாலின பாகுபாடு, அதை எவ்வாறு சரிப்படுத்துதல், பெண்கள் பாதுகாப்பு, பாலின சமத்துவம் குறித்து பயிற்றுவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் செயல்பட்டுவரும் பாலின உணா்திறன் மையங்கள் மற்றும் பெண் கல்வி மையம் சாா்பில் பாலின சமத்துவம் பற்றிய இணையவழியில் கருத்தரங்குகள், காணொலிக் காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். மேலும், கல்லூரிகளும் பாலின சமத்துவம், பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய வகுப்புகளை இணையவழியில் எடுக்க வேண்டும். இதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்ளை முகவரிக்கு கல்வி நிறுவனங்கள் அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews