10ம் வகுப்புக்கு காலாண்டு, அரையாண்டுத்தேர்வு நடத்தப்படவில்லையா? விசாரணை நடத்த கல்வி அதிகாரி உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 11, 2020

Comments:0

10ம் வகுப்புக்கு காலாண்டு, அரையாண்டுத்தேர்வு நடத்தப்படவில்லையா? விசாரணை நடத்த கல்வி அதிகாரி உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பாதிப்பு காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோவை போத்தனூர் ரெயில்நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் 28 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு மாதாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டதாகவும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. மாணவ-மாணவிகள் கருத்து இது குறித்து அந்த பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவ-மாணவிகள் கூறியதாவது:- எங்கள் பள்ளியில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தவில்லை. வினாத்தாள்களை மட்டும் கொடுத்தனர். இது தொடர்பாக ஆசிரியர்களிடம் கேட்டதற்கு தேர்வுக்கான பாடங்களை முடிக்கவில்லை என தெரிவித்தனர். மேலும், மாணவர்கள் முழு ஆண்டு தேர்வுக்கு தயாராகும் வகையில் பல கட்டங்களாக தேர்வுகள் நடத்தி உள்ளோம் என தெரிவித்தனர்.
இந்த நிலையில், அரசு தற்போது காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வின் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண் அளிப்பதாக தெரிவித்து உள்ளது. எங்கள் பள்ளியில் அந்த தேர்வுகள் நடத்தப்படவில்லை. எனவே மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் பட்டியல் எப்படி? தயார் செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. இதனால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். விசாரணை நடத்த உத்தரவு இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியின் முதல்வரிடம் தொடர்பு கொண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டதா?, அவ்வாறு நடத்தி இருந்தால் அவற்றின் விவரங்கள் குறித்த ஆவணங்களை உடனடியாக கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா கூறும்போது, காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் பள்ளியில் நடத்தாமல் இருக்க வாய்ப்பு இல்லை. சம்மந்தப்பட்ட பள்ளிக்கு தேர்வு நடத்த தேவையான வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. இருப்பினும் புகார் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews