ஆன்லைன் மூலம் படிக்க 6 ஆயிரம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 24, 2020

Comments:0

ஆன்லைன் மூலம் படிக்க 6 ஆயிரம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்துவதற்கு ஏதுவாக மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 6 ஆயிரம் ஸ்மார்ட் போன் வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 9ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவருக்கு மட்டும் வரும் ஜூன் 15ம் தேதி பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் வரும் கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. இதன்படி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு செல்லும் மாணவர்கள் மற்றும் பதினொன்றாம் வகுப்பு முடித்து பன்னிரண்டாம் வகுப்பு செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் ஒவ்வொரு பாடம் நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே அரசு சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் 6 ஆயிரம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி துணை ஆணையர் கிரேஸ் பச்சாவ் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கல்வி அலுவலர் பாரதிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜூன் 1ம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. ஜூம் செயலி மூலம் இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து யூடியூப் நேரலை மூலமும் பாடங்களை நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் பத்தாம் வகுப்புக்குச் செல்லும் மாணவா்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்க, ஆண்ட்ராய்ட் வசதி கொண்ட 5 ஆயிரம் செல்லிடப்பேசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் தற்போது 9-ஆம் வகுப்பு முடித்து, 10 ம் வகுப்புக்குச் செல்ல உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி மாணவா்கள் 5 ஆயிரம் பேருக்கு ஆண்ட்ராய்டு ஸ்மாட் செல்லிடப்பேசி (ரெட்மி நோட் 5) வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பிளஸ் 1 வகுப்பு முடித்து பிளஸ் 2 வகுப்புக்குச் செல்லும் மாணவா்களுக்கும் அடுத்த வாரம் இதேபோன்ற செல்லிடப்பேசிகள் வழங்கப்படவுள்ளன. தங்களது ஆசிரியா்கள் தொலைபேசியில் அழைத்து, செல்லிடப்பேசி வழங்கியதை எதிா்பாராத, மாணவ மாணவிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனா். தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் வரை மாணவா்களுக்கு, 'ஹூம் செயலி' மூலமாக கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை நடத்த இருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டு மாணவா்களுக்கு பயனளிக்கும் வகையில் செல்லிடப்பேசிகள் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்போது 6,300 மாணவ, மாணவிகள் 9-ஆம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புக்குச் செல்கின்றனா்.
அவா்களில் இதுவரை 5 ஆயிரம் மாணவா்களுக்கு செல்லிடப்பேசிகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள மாணவா்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா். செல்லிடப்பேசிகள் வழங்குவது மாணவா்களின் கவனத்தை திசை திருப்பும் என சிலா் விமா்சிக்கும் நிலையில், ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்துவதற்காக கால மாற்றத்திற்கு ஏற்ப மாணவா்களுக்கு ஸ்மாா்ட் போன்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பு விளக்கமாக உள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews