நான்கு மாவட்ட 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு திருத்த நடவடிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 24, 2020

Comments:0

நான்கு மாவட்ட 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு திருத்த நடவடிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஈரோடு மாவட்டம் கோபியில் நிவாரண பொருட்களை வழங்கிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 15 முதல் 25ம் தேதி வரை தேர்வு நடைபெறும். அதற்காக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை மூலமாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது. இதுவரை மாணவர் சேர்க்கைக்கான எவ்வித அறிவிப்பும் அரசு வழங்கவில்லை. அரசு உத்தரவை மீறி மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்த வற்புறுத்துவதாக புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று சிறப்பு வகுப்பு, நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்து புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மலைவாழ் குழந்தைகள் படிப்புக்காக தேசிய குழந்தைகள் திட்டம் மூலம் புதிய பள்ளி கட்டிடம் அமைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார். பொது முடக்க காலத்தில் மாணவர் சேர்க்கை உள்ப ட அரசு அறிவிக்காத நடவடிக்கைகளை பள்ளிகள் மேற்கொண்டால், தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்ப டும் எனபள்ளிக் கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பொது முடக்கம் மே31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த காலக்கட்டத்தில், சில அடிப்படைபணி களை மட்டும் மேற்கொள்ள அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் நடத்தி கொள்ளலாம். அதேபோன்றுதேவையான சில பணிகளை ஆன்லைனில் மேற் கொள்ளலாம். அதற்கு மாறாக, பள்ளிகளைத் திறந்து வேறு எந்த நடவ டிக்கையிலும் ஈடுபடக் கூடாது. இந்தநிலையில், மாணவர் சேர்க்கையை நடத்துதல், கட்டணம் வசூ லித்தல் உள்ளிட்ட பணிகளை சில தனியார் பள்ளிகள் மேற்கொண் டுள்ளன. பெற்றோரைப் பள்ளிக்கு வரவழைத்து, அவர்களிடம் விண் ணட்டங்களையும் பெறுகின்றன. அதேபோன்று மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்துகின்றன.இது குறித்து, புகார்கள் வந்த பள்ளிகள், சுகாதா ரத் துறைமற்றும் உள்ளாட்சி அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட் டுள்ளன. இந்தநிலையில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், மாவட்டக் கல்வி அதிகாரிகள் மூலமாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் கரோனா பொது முடக்க காலத்தில் அரசு அறிவிக்காத பணி களை, பள்ளிகள் மேற்கொள்ளக்கூடாது. மாணவர்கள் மற்றும் பெற்றோரை பள்ளிக்கு வரவழைப்பதுகூடாது. உத்தரவை மீறும் பள்ளிகள் மீது தொற்று நோய் பரவல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews