இன்று முதல் வங்கிகளில் பணம் எடுக்க புதிய விதிமுறை.. யார் எந்த நாளில் பணம் எடுக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 04, 2020

Comments:0

இன்று முதல் வங்கிகளில் பணம் எடுக்க புதிய விதிமுறை.. யார் எந்த நாளில் பணம் எடுக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்று முதல் ஊரடங்கில் பெரும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வங்கிகளில் பணமெடுக்க மக்கள் பெரும் அளவில் இனி கூடுவார்கள் என்பதால், அதனை முறைப்படுத்த இந்திய வங்கிகள் சங்கம் மே 4ம் தேதி தொடங்கி மே 11ம் தேதி வரை புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிகப்பட்டுள்ளது. இதன்படி மே 17 ம்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமூக இடைவெளி - தளர்வு அறிவிப்பு
எனினும் நாளை முதல் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் ஊரடங்கில் பெரும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிவப்பு மண்டலத்திலும் ஓரளவு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல நிறுவனங்கள் இந்த வாரத்தில் சம்பளம் வழங்க உள்ளன.இதனால் வங்கிகளில் அதிக கூட்டம் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அத்துடன் தற்போத சமூக இடைவெளியை வாடிக்கையாளர்கள் முறையாக கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
மே 4ல் யார் எடுக்கலாம் - புதிய விதிமுறை
இதையடுத்து வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய விதிகள் கொண்டுவந்துள்ளன. அதன்படி வங்கிகளில் பணம் எடுக்க வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியை ஒதுக்க்க உள்ளன. இந்த திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. வங்கி கணக்கு எண்ணின் கடைசி இலக்கம் 0 மற்றும் 1 உடையவர்கள் மே 4 ம் தேதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மே 5ல் யார் எடுக்கலாம் - மே6ல் யார் எடுக்கலாம்
புதிய விதிமுறை இதையடுத்து வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய விதிகள் கொண்டுவந்துள்ளன. அதன்படி வங்கிகளில் பணம் எடுக்க வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியை ஒதுக்க்க உள்ளன. இந்த திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. வங்கி கணக்கு எண்ணின் கடைசி இலக்கம் 0 மற்றும் 1 உடையவர்கள் மே 4 ம் தேதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மே 11 வரை அமல் -இந்திய வங்கிகள் சங்கம்
இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் மே 11 ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்து.. அதற்குபின் வழக்கம் போல் யார் வேண்டுமானாலும் எந்த தேதியிலும் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக எந்த வங்கி ஏடிஎம்களில் பணம் வசூலித்தாலும் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் வங்கிகளில் குவியாமல் ஆன்லைன் பணபரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு வங்கிகள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், இணையவழி பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடியாதவர்களுக்காக புதிய விதிமுறைகளை இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அமல்படுத்தியுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு வங்கிக் கணக்கின் கடைசி எண்ணைக் கொண்டு வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நாட்களில் பணம் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களின் கணக்கு எண்ணின் கடைசி எண் பூஜ்யம் அல்லது ஒன்று என இருந்தால் அவர்கள் மே 4ஆம் தேதி வங்கிகளில் பணம் எடுக்கலாம்.
வாடிக்கையாளர்களின் கணக்கு எண் 2 அல்லது 3 ஆகிய எண்களில் முடிந்தால் அவர்கள் மே 5ஆம் தேதியும்,4, மற்றும் 5 என முடியும் கணக்கு எண் கொண்டவர்கள் மே 6ஆம் தேதியும் வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்கலாம் என்ற நடைமுறையை வங்கிகள் அமல்படுத்தியுள்ளன. வாடிக்கையாளர்களின் கணக்கு எண் 6 மற்றும் 7இல் முடிவடைந்தால் அவர்கள் மே 8ஆம் தேதியும், கணக்கு எண் 8 அல்லது 9இல் முடிவடைந்தால் அவர்கள் மே 11ஆம் தேதியும் பணத்தை எடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை மே 11ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எந்த தேதியில் வேண்டுமானாலும் வங்கிகளுக்குச் சென்று பணத்தை எடுக்கலாம் என்றும் இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews