நுழைவு தேர்வு நடத்திய பள்ளிக்கு பூட்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 21, 2020

Comments:0

நுழைவு தேர்வு நடத்திய பள்ளிக்கு பூட்டு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கூடலுாரில், மாணவருக்கு நுழைவுத் தேர்வு நடத்திய தனியார் பள்ளிக்கு, அதிகாரிகள் பூட்டு போட்டனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் உள்ள தனியார் பள்ளி திறந்து செயல்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து, தாசில்தார் சங்கீதாராணி, நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் வருவாய் ஆய்வாளர்கள் ரமேஷ், சாந்தி ஆகியோர் பள்ளியை ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது, பள்ளி அலுவலகம் திறந்து செயல்படுவதும், மாணவர் சேர்க்கைக்காக வகுப்பறையில் மாணவர் ஒருவருக்கு நுழைவுத்தேர்வு நடத்துவதும் தெரியவந்தது.
தொடர்ந்து, பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் உட்பட அனைவரையும் வெளியேற, அதிகாரிகள் உத்தரவிட்டனர். பின், பள்ளிக்கு அதிகாரிகள் பூட்டு போட்டு சாவியை எடுத்து சென்றனர். நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில்,''பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது, மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு நடத்துவது தெரியவந்தது. அரசு உத்தரவு மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews