கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு சம்பளம் தரப்படவில்லை - பணியாளர்கள் தவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 14, 2020

Comments:0

கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு சம்பளம் தரப்படவில்லை - பணியாளர்கள் தவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, கல்வி நிறுவனங்களில் பணிபுரியும், தொகுப்பூதிய பணியாளர்கள், சம்பளம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், ஐந்து கல்லுாரிகள், ஒரு தொழில்நுட்ப கல்லுாரி உட்பட, 54 கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், 42 கல்வி நிறுவனங்கள் சுயநிதி பிரிவில் இயங்கி வருகின்றன. இவற்றில், தொகுப்பூதியத்தில் மட்டும், 1,000 பேருக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கால், சம்பளம் வழங்கப்படாததால், தொகுப்பூதிய பணியாளர்கள் குடும்பங்கள் தவித்து வருகின்றன.அதேபோல, கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு முரண்பாடான சம்பளமும் உள்ளது.
அரசு விடுமுறை நாட்களுக்கும், கோடை விடுமுறை நாட்களிலும் சம்பளம் துண்டிக்கப் படுகிறது.இது குறித்து, அறநிலையத்துறை கமிஷனர் தனி கவனம் செலுத்தி, உரியவர்களுக்கு சம்பளம் வழங்கி, அவர்களுக்கு உள்ள முரண்பாடுகளை நீக்கி, உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews