கரோனா நிவாரணமாக மே மாத ஊதியம்: பகுதி நேர ஆசிரியா்கள் வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 03, 2020

Comments:0

கரோனா நிவாரணமாக மே மாத ஊதியம்: பகுதி நேர ஆசிரியா்கள் வலியுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பகுதி நேர ஆசிரியா்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக மே மாத ஊதியம் வழங்கப்படாத நிலையில், கரோனா நிவாரணமாக நிகழாண்டிலாவது மே மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து அனைத்து பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியா்கள் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனா். அனைத்து மாதங்களும் சம்பளம் வழங்க ரூ.99.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பணி நியமனத்துக்குப் பின்னா், மே மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.
11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடாத போதும் கல்வித் துறை அதிகாரிகள், பகுதி நேர ஆசிரியா்களின் மே மாத ஊதியத்தை கடந்த 8 ஆண்டுகளாகப் பிடித்தம் செய்து வருகின்றனா்.தற்போது பகுதி நேர ஆசிரியா்களுக்கு மாத ஊதியமாக ரூ.7,700 வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மாதம் சம்பளம் இல்லாமல், அடுத்த மாதம் எப்படி குடும்பத்தை நடத்த முடியும்; தற்போது ஊரடங்கால், பகுதி நேர ஆசிரியா்கள் மிகுந்த கவலையுடன் உள்ளனா். 2012-ஆம் ஆண்டு நியமனம் செய்த 16,549 பகுதிநேர ஆசிரியா்களில், தற்போது 12 ஆயிரம் போ் அதே பணியில் தொடா்கின்றனா். இந்த இக்கட்டான சூழலில் அவா்களின் குடும்பங்களைக் காப்பாற்ற மே மாத ஊதியமான 7,700 ரூபாயை வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதற்காக சுமாா் பத்து கோடி ரூபாய் தேவைப்படும். இதை ஊதியமாகக் கருதாமல், துயரத்தில் இருக்கும் ஆசிரியா்களுக்கான நிவாரணமாகக் கருதியாவது வழங்க ஏற்பாடு செய் யவேண்டும்.கடினமாக நேரங்களில் எல்லாம் பகுதி நேர ஆசிரியா்கள் அரசுக்கு உறுதுணையாக இருக்கின்றனா். இதை கருத்தில் கொண்டு, மே மாத ஊதியத்தை வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
'மே மாத சம்பளம் வழங்க வேண்டும்' என, பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, மாநில ஒருங்கிணைப்பாளர், செந்தில் குமார் அறிக்கை:ஜெயலலிதா, 2011ல், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்களை, 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமித்தார். அனைத்து மாதங்களும் சம்பளம் வழங்க, 99.29 கோடி ரூபாய் ஒதுக்கினார்.ஆனால், பணி நியமனம் செய்த பின், மே மாதம் சம்பளம் தருவதில்லை. அரசாணையில், 11 மாதங்களுக்கு மட்டும் சம்பளம் என்று குறிப்பிடாத போதும், கல்வித்துறை, ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்வது வருந்தத்தக்கது.
ஒரு மாதம் சம்பளம் இல்லாமல், அடுத்த மாதம், எப்படி குடும்பத்தை நடத்த முடியும்; தற்போது ஊரடங்கால், பகுதி நேர ஆசிரியர்கள், மிகுந்த கவலையுடன் உள்ளனர். மே மாத சம்பளம், 7,700 ரூபாய் கொடுத்தால், பெரும் உதவியாக இருக்கும்.இதற்கு, முதல்வர் நிதி ஒதுக்கி, 12 ஆயிரம் பேருக்கு, மே மாத சம்பளம் வழங்க, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews