ஆராய்ச்சி மாணவர்களுக்கு கட்டுரை சமர்ப்பிக்க அவகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 09, 2020

Comments:0

ஆராய்ச்சி மாணவர்களுக்கு கட்டுரை சமர்ப்பிக்க அவகாசம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பி.எச்டி., மாணவர்களுக்கு ஆறு மாத கால அவகாச நீட்டிப்பு வழங்கி, அனைத்து கல்லுாரிகளுக்கும் பாரதியார் பல்கலை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. கொரோனா காரணமாக கல்லுாரி, பல்கலை மூடப்பட்டுள்ள நிலையில், செமஸ்டர் தேர்வுகள், அடுத்தாண்டு மாணவர் சேர்க்கை போன்ற பல்வேறு விஷயங்களுக்கு யு.ஜி.சி., வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.இதில், எம்.பில்., மற்றும் பி.எச்டி., ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆறு மாத கால நீட்டிப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக கோவை, பாரதியார் பல்கலையின் கீழ் உள்ள அனைத்து கல்லுாரிகளுக்கும் பல்கலை பதிவாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், 'யு.ஜி.சி., வழிகாட்டுதலின்படி கொரோனா காரணமாக ஏற்பட்ட சில தடைகளால், பி.எச்டி., ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்க, அதிகபட்சம் ஆறு மாத கால அவகாச நீட்டிப்பு வழங்கப்படுகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews