மாணவர்கள் மனநிலை 'ஆன்லைன்' ஆய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 22, 2020

Comments:0

மாணவர்கள் மனநிலை 'ஆன்லைன்' ஆய்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஊரடங்கு நேரத்தில், கல்லுாரி மாணவர்களின் மனநிலை எப்படி உள்ளது என்பது குறித்து, கோவை மருத்துவ கல்லுாரி மாணவர்கள், 'ஆன்லைன்' ஆய்வு நடத்தி வருகின்றனர். கல்லுாரி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்த கல்வியாண்டு துவங்கியதும், 'செமஸ்டர்' தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனால், கல்லுாரிகள் எப்போது துவங்கும், தேர்வுகள் எப்போது நடக்கும் என, மாணவர்கள் காத்திருக்கின்றனர். குறிப்பாக, மூன்றாம்ஆண்டு கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்கள், நான்காம் ஆண்டு படிக்கும் இன்ஜி.,கல்லுாரி மாணவர்களுக்கு ஒருவித உளவியல் ரீதியான தாக்கம் ஏற்பட்டுள்ளது.
கல்லுாரி மாணவர்களின் மனநிலை குறித்து, கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவர்கள், 'ஆன்லைன்' ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஆய்வு நடத்தும் மாணவர்கள் கூறுகையில், 'இறுதியாண்டு மாணவர்கள் வேலைவாய்ப்பு, செமஸ்டர் தேர்வுகள்,அடுத்த கட்டம் குறித்து, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதேபோன்று, மற்றமாணவர்களின் மனநிலை குறித்தும் அறிய, ஆன்லைன் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டு, மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன' என்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews