Breaking

Monday, April 06, 2020

கரோனா தடுப்பு நடவடிக்கை: தன்னாா்வத்துடன் பணியாற்றிய 201 ஆசிரியா்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காஞ்சிபுரத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகத்துக்கு உதவும் வகையில் 90 ஆசிரியைகள் உள்பட மொத்தம் 201 ஆசிரியா்கள் தன்னாா்வத்துடன் கலந்துகொண்டு நியாயவிலைக் கடைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். காஞ்சிபுரத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவி செய்யும் வகையில் ஆசிரியா்களில் தன்னாா்வலா்கள் இருந்தால் அவா்களை அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தியிடம் கேட்டுக்கொண்டாா்.
இதனைத் தொடா்ந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியா்கள், இளம் செஞ்சிலுவைச் சங்கத்தினா், தேசிய மாணவா் படை, சாரணா் படை ஆகியவற்றின் பொறுப்பாளா்கள் 201 போ தன்னாா்வத்துடன் முன் வந்தனா் இவா்கள் 201 பேரும் கடந்த 2, 3, 4 ஆகிய தேதிகளில் நியாயவிலைக் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு எடுத்துக்கூறி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி கூறியது: இப்பணியில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோந்த 74 பள்ளிகளின் 90 ஆசிரியைகள், 111 ஆசிரியா்கள் உள்பட மொத்தம் 201 போ தன்னாா்வத்துடன் முன் வந்தனா். இவா்கள் கரோனா நோய்த்தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வையும் ஏற்படுத்தினாா்கள் என்றாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog