10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் :அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 13, 2020

Comments:0

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் :அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி, அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள், நிரந்தரம் செய்யப்படாதது குறித்து கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டதால், 5 ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 17பி நடவடிக்கையை திரும்பப் பெறுமாறு, எம்எல்ஏ பூங்கொடி கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,
திமுக ஆட்சிக்காலத்தில் தேவை இருந்ததால் ஆசிரியர்கள் உடனடியாக நிரந்தரம் செய்யப்பட்டதாகவும், ஆனால் தற்போது அதுபோன்ற சூழல் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், உடனுக்குடன் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படுவதாக கூறிய அவர், மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக தவறாக வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களை அடிப்படையாக கொண்டு பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, மாணவர்கள் இடைநிற்றல் விவகாரம், மாணவர் சேர்க்கை புள்ளி விவரம் உள்ளிட்ட விஷயங்களில் குளறுபடிகளும், சர்ச்சைகளும் வெடித்ததன் காரணமாக, இந்த ஆண்டு ஆவண புத்தகத்தை, கல்வித்துறை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவில்லை என தெரிவித்தார். அதனைதொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், உள்ள 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் இனி பெற்றோரின் பெயரும் இடம் பெறும் என்றும், சேதமடையாத மதிப்பெண் சான்றிதழ்: பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களின் தரத்தினை மேம்படுத்தி, புதிய வடிவமைப்பில் எளிதில் கிழிக்க இயலாத மற்றும் தண்ணீரால் சேதம் அடையாத வகையில் செயற்கை இழையினாலான மேம்படுத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவா்களுக்கு வழங்கப்படும்.
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம் என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் நலனுக்காக பள்ளி பரிமாற்றத்திட்டம் கொண்டுவரபப்படும் என தெரிவித்தார். மேலும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் இருப்பதை உறுதி செய்ய ஆசிரியரல்லாத பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews