ஏப்.,1 முதல் தேசிய மக்கள்தொகை பதிவு துவக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 18, 2020

1 Comments

ஏப்.,1 முதல் தேசிய மக்கள்தொகை பதிவு துவக்கம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டில்லி மாநகராட்சியில் வரும் ஏப்ரல் 1 ம் தேதி முதல் தேசிய மக்கள்தொகை பதிவிற்கான பணிகள் துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CLICK HERE FOR THIS AUDIO NEWS
இதில் முதல் ஆளாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பெயர் சேர்க்கப்பட உள்ளது. பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு ஆகியோரின் பெயர்களும், அவர்களை குறித்த விபரங்களும் சேர்க்கப்பட உள்ளது. துவக்க நாளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு கழக கமிஷனர் இப்பணியை துவக்கி வைக்க உள்ளார். அரசின் 3 துறைகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. ஜனாதிபதி பற்றி கணக்கெடுப்பு உள்துறை அமைச்சர் முன்னிலையில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
CLICK HERE FOR THIS AUDIO NEWS
கணக்கெடுப்பு கழக கமிஷனர் தலைமையிலான குழு அதே நாளில் துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பற்றிய கணக்கெடுப்பு பதிவுகளை நேரில் சென்று ஆய்வு செய்ய செல்லும். இத்திட்டத்திற்கு தாங்களே முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரின் இல்லங்களுக்கும் நேரடியாகவே செய்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. மத்திய அமைச்சர்களின் வீடுகளிலும் இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. என்பிஆர்.,ஐ அமல்படுத்த கேரளா உள்ளிட்ட மாநிலங்களும், காங்., ஆளும் மாநிலங்களும் மறுத்து வருகின்றன. இதனால் அதிகாரிகள், அந்த மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து இது தொடர்பாக பேச உள்ளதாக கூறப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:


  1. Very well explained and informative blog click here for
    Divorce counselling service dial on our counselling number 070654 17417 to get counselling appointment

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews