👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொதுத்தோ்வு எழுதும் மாணவிகளை பெண் ஆசிரியைகளே சோதனையிடுவாா்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கொளப்பலூா் பேரூராட்சி அலுவலகத்தில் கோபி கோட்டாட்சியா் ஜெயராமன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 49 பயனாளிகளுக்கு சுமாா் ரூ.50 லட்சம் மானியத்தொகையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி சிறப்புரையாற்றினாா்.இதனை தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசுகையில், கொளப்பலூா்-குன்னத்தூா் புதிய கூட்டுக்குடிநீா் திட்டத்திற்கு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சிறப்பு கோட்டம் ஒன்று உருவாக்க தமிழக முதல்வா் ஆணை பிரப்பித்துள்ளாா். அதனால் சாலைகள் மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்படும்.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 75 சதவீதம் பெண் ஆசிரியா்களே பணியாற்றுவதால் தோ்வெழுதும் மாணவிகள் சோதனை குறித்து அச்சப்பட தேவையில்லை. ஆசிரியா் அல்லாத பணிகளான துப்புரவு பணியாளா், அலுவலக உதவியாளா் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் பள்ளிக்கல்வித்துறை மூலம் விரைவில் நிரப்பப்படும்.பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை மாணவா்களே சுத்தம் செய்யும் நிலை இனி வராது என்றாா்.நிகழ்ச்சியில் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியா் விஜயகுமாா், கோபி காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் தங்கவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
ஆசிரியர்களின் பணி போற்றுதலுக்குரியது - அமைச்சர் செல்லூர் ராஜு
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.