TNPSC - தேர்வாணைய பதவி விதிகள் மாறுமா?: தில்லுமுல்லு இல்லாமல் நடக்குமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 03, 2020

Comments:0

TNPSC - தேர்வாணைய பதவி விதிகள் மாறுமா?: தில்லுமுல்லு இல்லாமல் நடக்குமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் நியமனத்தில், விதிகளை மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தி, நிரப்பப்படுகின்றன. இந்த ஆணையத்தின் செயல்பாடுகளை, தேர்வாணையத்தின் செயலர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கவனிக்கின்றனர். இந்த இரண்டு பதவிகளிலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர்.தேர்வாணையத்தின் நடவடிக்கைகள், முறைகேடுகள் இன்றி முறையாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க, தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கவர்னரால் நியமிக்கப் படுகின்றனர். தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம், சலுகைகள், ஊழியர் உள்ளிட்ட வசதிகள் மற்றும் ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 'குரூப் - 4ல் துவங்கி, குரூப் - 2, குரூப் - 2ஏ, குரூப் - 1 ஆகிய தேர்வுகளில் விதி மீறல், மோட்டார் வாகன ஆய்வாளர் பதவி தேர்வில் குளறுபடி என்று, தேர்வாணைய தேர்வுகள் எல்லாம், ஊழல், 'சுனாமி'யாக சுழற்றி அடிக்கிறது.தேர்வாணையத்தில் பணியாற்றுவோருடன், இடைத்தரகர்கள் சேர்ந்து, லட்சக்கணக்கில் பணம் பெற்று, அரசு வேலைகளில் தங்கள் ஆட்களை திருட்டு தனமாக சேர்த்துள்ளனர். இவ்வாறு சேர்ந்தவர்கள், தாங்கள் கொடுத்த லட்சங்களை, கோடிகளாக புரட்ட, தங்களின் பதவிக் காலம் வரை வாரி சுருட்ட வாய்ப்புள்ளது.
இப்போது, குறுக்கு வழியில் வேலைக்கு சேர்ந்த பெருச்சாளிகளால், அடுத்த தலைமுறை வரை, லஞ்சப்பேய் தலை விரித்தாடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை, தேர்வாணையத்தின் உயர் பதவியில் உள்ளவர்கள் தடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஊழலை தடுக்க வேண்டும் என்றால், தேர்வாணையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை, இரும்புக்கரம் கொண்டு நிர்வகித்து, சமூக எண்ணத்துடன் செயல்படும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, இளைய தலைமுறையினரிடம் ஏற்பட்டுள்ளது. அரசு பணிகளுக்கான போட்டி தேர்வோ, நேர்முக தேர்வோ எதுவானாலும், அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள், டி.என்.பி.எஸ்.சி., ஊழியர்கள், மற்ற அரசு துறை ஊழியர்கள் ஆகியோரின் தில்லுமுல்லுகள் இல்லாமல் நடத்தப்படுவதை, தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு முதல் கட்டமாக, வருங்காலங்களில் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர் பதவி நியமனங்களில், விதிகளை மாற்ற வேண்டும்.அரசு வேலைக்கு எப்படி போட்டி தேர்வும், நேர்முக தேர்வும் நடத்தப்படுகிறதோ, அதே போல், தேர்வாணைய பதவிக்கும், நேர்மைத்தன்மை, தகுதி மற்றும் துறை சார்ந்த அனுபவத்தை சோதிக்கும் தேர்வை நடத்த வேண்டும். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற பதவிகளில் இருக்கும் நீதிபதிகள் வழியாக, தகுதி தேர்வையும், நேர்முக தேர்வையும் நடத்தி, நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்.தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு, அரசின் சார்பில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்குவதால், அவர்களது பணிகளையும் கண்காணிப்பில் எடுத்து வர வேண்டும். லஞ்ச ஒழிப்பு உள்ளிட்ட அனைத்து வகை சட்டங்களின் கீழ், கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், இனிமேல் ஓய்வு பெறுவோர் ஆகிய அனைவருக்கும், பாரபட்சமின்றி சொத்து மற்றும் வருமான கணக்கெடுப்பு நடத்தி, தவறுகள் நடக்கவில்லை என்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews