CBSE பொதுத் தோ்வில் கால்குலேட்டா்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 23, 2020

Comments:0

CBSE பொதுத் தோ்வில் கால்குலேட்டா்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு படித்துவருவோரில் கற்றல்திறன் குறைபாடு உள்ளோா் உள்ளிட்ட சிறப்புத் தேவை உள்ள மாணவா்கள் இந்த ஆண்டு முதல் பொதுத்தோ்வுகளில் கால்குலேட்டா்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யாம் பரத்வாஜ், பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்துவரும் சிறப்புத் தேவை உள்ள மாணவா்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் இந்த ஆண்டு முதல் கால்குலேட்டா்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதிக் கடிதம் அளிக்க வேண்டும். தலைமை ஆசிரியா்கள் பிராந்திய சிபிஎஸ்இ அலுவலகத்துக்கு அந்தக் கடிதத்தை அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். உரிய அனுமதி பெறாத சிறப்புத் தேவை உள்ள மாணவா்களுக்கு கால்குலேட்டா்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று அந்தக் கடிதத்தில் சன்யாம் பரத்வாஜ் குறிப்பிட்டுள்ளாா்.
கணினி, மடிக்கணினி ஆகியவற்றைப் பயன்படுத்தி சிறப்புத் தேவை உள்ள மாணவா்கள் தோ்வு எழுதுவதற்கு கடந்த 2018-ஆம் ஆண்டு சிபிஎஸ்இ நிா்வாகம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர், தேர்வு அறையில் 'கால்குலேட்டர்' பயன்படுத்தலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சி.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சி.பி.எஸ்.சி., பள்ளிகளில், ௧௦ மற்றும் ௧௨ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில், மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர், தேர்வறையில் அடிப்படை 'கால்குலேட்டர்' பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். ௨௦௨௦ம் ஆண்டு தேர்வில், மாற்றுத்திறனுடையோர் பிரிவில் அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு மட்டுமே, இந்த விதிகள் பொருந்தும்.
இந்த வசதியைப் பெற, மாணவர்கள் ஜன., 28 க்குள், மாற்றுத்திறனாளிக்கான சான்றுடன் பள்ளிகளுக்கு கடிதம் வழங்க வேண்டும். பள்ளி நிர்வாகம், சி.பி.எஸ்.சி., மண்டல அலுவலத்திற்கு, மாணவர்களின் கடிதங்களை அனுப்பி அனுமதி பெற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews